சென்னையில், ஆகஸ்ட் 3, 2026 (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
மின் தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள், தேவையான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளுமாறு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
அம்பத்தூர்
கொரட்டூர், மண்ணூர்பேட்டை, டிஎன்ஹெச்பி, சென்ட்ரல் அவென்யூ, எம்.டி.எச். சாலை, ஆர்.எஸ். சாலை, முகப்பேர் சாலை, கிழக்கு அவென்யூ, மேனாம்பேடு சாலை, திருமுல்லைவாயில் சாலை.
அடையாறு
இரட்டைப்பிள்ளையார் கோயில் தெரு, அண்ணா தெரு, பாரதி தெரு, சான் அகாடமி, வ.ஊ.சி. நகர் 1வது முதல் 4வது தெருக்கள் வரை, ஜோஷ்னா ஃபிளாட்ஸ், ஸ்ரீனிவாச நகர், தேவி ஃபிளாட்ஸ், முருகு நகர், கோமதி நகர், ஜெயின் ஃபிளாட்ஸ்.
தாம்பரம்
பெரியார் நகர், தேவராஜ் பிள்ளை தெரு, விஜிஎன், நித்யானந்தம் நகர், பெருமாள் கோயில் தெரு, ஜி.எஸ்.டி. சாலை, சர்வீஸ் சாலை, இரும்புலியூர்.
